ஒரு வாழ்த்து மடலுக்கான அட்டையை தேர்ந்தெடுத்தலில் செலவான காலம் சொல்லும் உன் மீதான அன்பை…
ஊட்டிவிடுகையில் விரலை கடிக்கவில்லையென்றால்.. அப்புறம் என்ன காதல் அது!
எத்தனை பூ யாருக்காக சூடியிருப்பினும் பதிணெண் பருவத்தில் நீ முள்ளின் முனை தாங்கி பறித்து சூட்டிவிட்ட கள்ளிப்பூவில் காதலுற்ற கள்ளி நான்.
சாக்லெட்டும் ஐஸ்கிரீமும் பல சுவைத்தாலும் பதிணெண் பருவத்தில் நீ களவாடி தந்த திருட்டு மாங்காய் தித்திக்கிறது உன்னை போலவே நாவில்!
பட்டு உடைகள் பல இருந்தாலும் பதிணெண் பருவத்தில் நீ இழுத்தபோது கிழிந்த ரோசாப்பூ போட்ட மஞ்சள் பாவாடை மனதுள் நிற்கிறது… உன்னைபோல்